
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.