தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வார இறுதி நாட்களை முன்னிட்டு வருகின்ற வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 415 கூடுதல் பேருந்துகளும் சனிக்கிழமை 310 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.