
திமுக எம்.எல்.ஏ. நா.புகழேந்தி மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற ஜுலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக, பாஜக இடையே போட்டி எழுந்துள்ளது.
தமக்கு செல்வாக்கு அதிகமுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியில் போட்டியிட வேண்டும் என்று பாமக நினைக்கிறது. அதேசமயம், பாஜகவும் போட்டியிட விரும்புவதால் விவாதம் எழுந்துள்ளது.