
தேமுதிக கட்சியின் தலைவரும் மறைந்த தலைவருமான விஜயகாந்த் பிறந்தநாள் இன்று. இதை முன்னிட்டு சென்னை தேமுதிக அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த விழாவின்போது விஜயகாந்தின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவருடைய மகன்கள் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது திடீரென விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார். அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் அவர் மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சண்முகபாண்டியனை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.