திமுக, அதிமுகவிற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் சண்முகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி முன்னாள் மாணவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த கல்லூரியில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த இவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது, பீகார் மாநில தேர்வு முடிவுகள் முடிவுகள் வருத்தம் அளிக்கிறது.

எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மை காரணமாக பாஜக தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இந்தியா கூட்டணி இதை உணர வேண்டும். மீண்டும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.  தமிழகத்தில் திமுக தலைமையில் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருப்பது போல பிற மாநிலங்களில் இல்லை. அங்கெல்லாம் இந்தியா கூட்டணி வலுப்பெற வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  அதற்கான முயற்சியையும் மேற்கொள்ளும்.

தமிழக அரசியலில் பல பிரபலங்கள் வந்து சென்றுள்ளார்கள். அதிமுக மற்றும் திமுக கட்சிகளை விரும்பாதவர்கள் நடிகர் விஜய்யை ஆதரிக்கலாம். ஆனால் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக விஜய் வருவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்று கூறியுள்ளார்.