
தென்காசி மாவட்டத்தில் உள்ள அய்யனூர் கிராமத்தில் சேர்மகனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்க்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு செர்மகனிக்கு ஜோதி சந்திரகனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை சேர்மகனி வேலைக்கு சென்ற பிறகு ஜோதி திடீரென மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஜோதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.