பெண்கள் தங்களுடைய கணவரை இன்னொருவரோடு பங்கிட்டுக் கொள்வது பெரும்பாலும் நடக்காத காரியம். அதை விரும்பவும் மாட்டார்கள்.  தன் கணவர் இன்னொரு பெண்ணை பார்த்தாலே அவர்களுக்கு பிடிக்காது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இரண்டு மனைவிமார்கள் தங்களுடைய கணவருக்கு மூன்றாவது திருமணத்தை செய்து வைக்க தயாராகி உள்ளார்கள். ஆந்திர மாநிலம் சீதாராம ராஜ் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பர்வதம்மா என்பவரோடு முதலாவது திருமணம் நடந்த நிலையில் குழந்தை இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் பாண்டன்னா  என்பவர். அவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் முதல் மனைவி உடனே இருந்துள்ளார். தற்போது கணவர் இன்னொரு குழந்தை கேட்கும் நிலையில் மனைவிகள் இரண்டு பேரும் சேர்ந்து கணவர்க்கு மூன்றாவது திருமணம் ஏற்பாடு செய்துள்ளார்கள். அதே ஊரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரோடு திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். இதில் வினோதம் என்னவென்றால் திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்ட பத்திரிகையில் முதல் இரண்டு மனைவிகளின் புகைப்படமும் உள்ளது என்பதுதான்.