ஆஸ்திரேலியாவில் மன்பிரீத் கவுர் (24) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சமையல் படிப்புக்காக சென்றுள்ளார். அங்கு அவர் சமையல் கலையை படித்து வந்ததோடு வேலையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் 4 வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய குடும்பத்தை பார்ப்பதற்காக இளம் பெண் இந்தியாவுக்கு கிளம்ப தயாரானார்.

அதன்படி இவர் மெல்போன் நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் ஏறினார். இவர் விமானத்தில் ஏறும்போதே தனக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதாக உணர்ந்தார். இருப்பினும்  விமானத்தில் ஏறி சீட் பெல்ட் அணிந்தார். ஆனால் சற்று நேரத்தில் இளம்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த தொடர்பாக விமான பணியாளர்களுக்கு தெரியவந்த நிலையில் உடனடியாக அவர்கள் அங்கு ஓடி வந்தனர். அந்தப் பெண் நுரையீரல் தொற்று பாதிப்பினால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அவருடைய உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.