ஐசிசி 9-வது டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கிரேக் சோப்பல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்திய அணி வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தான். இந்திய கிரிக்கெட்டின் மீதான அவருடைய ஆர்வம் எப்போதும் தெளிவாக தெரியும். எனவே இந்த வெற்றிக்கான திட்டத்தில் அவர் நிச்சயம் முக்கிய பங்கு வகித்திருப்பார். இதனால் இந்த வெற்றி அவருக்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும். மேலும் இந்திய அணியில் அவர் உலகக் கோப்பையுடன் தன்னுடைய நேரத்தை முடித்திருப்பதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.