
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் இன்று சென்னை அண்ணாசாலையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “பாஜக இந்தியை தேசிய கல்விக் கொள்கை மூலமாக திணிப்பதில் உறுதியாக இருக்கிறது. தாய்மொழியை கற்க எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பதுதான் புதிதாக இருக்கிறது. பாஜக அதனை சட்டபூர்வமாக கூட நிலை நிறுத்த பார்க்கிறார்கள்.
ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இந்தி போன்ற மொழிகளை கற்பதில் யாருக்கும் எந்த சங்கடமும் இல்லை. அப்படி கற்றுக் கொள்ளக் கூடாது என்று எந்த கட்சியும் தமிழகத்தில் தடை விதிக்கவில்லை. ஆனால் அனைவரும் இந்திய கற்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சட்டபூர்வமாக கட்டாயப்படுத்துவது ஏற்க முடியாது” எனக் கூறியுள்ளார்.