நாட்டின் 77வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் செங்கோட்டையில் கொடி ஏற்றிய பிரதமர் மோடி விவசாயிகளுக்கு யூரியா மானியமாக 10 லட்சம் கோடியை அரசாங்கம் ஒதுக்கியு

ள்ளதாக தெரிவித்துள்ளார். உலக அளவில் ஒரு மூட்டைக்கு 3000 ரூபாய் மதிப்புள்ள யூரியாவை விவசாயிகளுக்கு ஒரு மூட்டைக்கு 300 ரூபாய் என்ற மலிவான விலையில் வழங்குவதற்கு மானியமாக 10 லட்சம் கோடியை அலசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 2 கோடி சகோதரிகளை லட்சாதிபதிகளாக உறுதி மேற்கொண்டுள்ளதாகவும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ட்ரோன் பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கிராமப்புற வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் திறனை பெருமளவு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி 15,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ட்ரான்களை இயக்குவதற்கும் பழுது பார்ப்பதற்கும் கடன் மற்றும் பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.