
தமிழகத்தில் விவசாய நிலங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்மீட்டர்களில் பயன்பாடு இல்லாதவைகள் குறித்து கணக்கெடுக்க வேண்டும் என அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதாவது விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்து உரிய முறையில் கணக்கீடு செய்து தமிழக மின்சாரத்துறை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகம் முழுவதும் விவசாய நிலத்திற்காக 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒரு வருடத்திற்கு ஒரு இணைப்புக்கு 30 ஆயிரம் ரூபாயை தமிழக மின்சார துறைக்கு வேளாண்மை துறை வழங்குகிறது. இந்நிலையில் இலவச மின்சார பயன்பாட்டை சிலர் தவறான முறையில் பயன்படுத்துவதாக தற்போது புகார் எழுந்துள்ளது. மேலும் இதன் காரணமாக தற்போது விவசாய நிலங்களில் பயன்பாட்டில் இல்லாத மின் மீட்டர்கள் குறித்து கணக்கீடு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசு ஒரு அறிவித்துள்ளது.