தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வீடுகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நலத்திட்டம் பெறும் பயனாளிகள் ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை செய்து கொடுக்கலாம். ஆதார் எண் பெறும் வரை விண்ணப்பித்ததற்கான அடையாள சான்று, வங்கி புத்தகம், பான் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.