சேலம் மாவட்டம் அத்தனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இளவரசி. இந்த தம்பதியினருக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு விஜயகுமாரின் வீட்டிற்கு முன்பு தோண்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் விக்னேஷும் சதீஷ்குமாரும் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மகன்கள் இறந்த செய்தி கேட்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த விஜயகுமார் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தில் சிக்கினார்.

அவருக்கு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை குடும்ப தகராறு காரணமாக இளவரசி தான் தனது மகன்களை கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.