
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை மாநகர் பரபரப்பாக காணப்படுகிறது .
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்த இயக்குநர் பா.ரஞ்சித் ஆம்ஸ்ட்ராங்கின் பிரிவு செய்தி கேட்டு தலையில் அடித்துக் கொண்டு கதறி கதறி அழுதுள்ளார். ஆம்ஸ்ட்ராங்க் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.