
18 ஆவது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 8 விக்கெட் வித்யாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 14 வயதான வைபவ் சூர்யவன்சி உலக சாதனை படைத்துள்ளார்.
அதாவது 35 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார். இதில் 11 சிக்ஸர்கள் மற்றும்7 பவுண்டரிகள் அடங்கும். இவர் ஐபிஎல் போட்ட கிறிஸ் கெயிலுக்குப் பிறகு அதிவேக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதேபோன்று ஜெய்ஸ்வால் 71 ரன்கள் வரை எடுத்திருந்தார். மேலும் இளம் வயதில் வைபவ் சூரியவன்சி படைத்த சாதனை ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.