
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிரண் (27)-பிரியங்கா (20) ஆகியோர் பணிபுரிந்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் காதல் வயப்பட்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருந்ததால் இரு வீட்டிலும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் இருவரும் காதலை கைவிடாமல் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய முடிவு செய்து அம்பேத்கர் ஜெயந்தி அன்று திருமணம் செய்து கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் அம்பேத்கர் செய்தியை முன்னிட்டு அவர்கள் திருமணம் ஜெயந்தியை முன்னிட்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் தாசில்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தலித் அமைப்பினர் வாழ்த்து கூறினர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.