
தேனி மாவட்டத்தில் உள்ள போடி திருமலாபுரம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சித் குமார் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவர் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரஞ்சித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.