
வேலூர் மாவட்டம் கார்னாம்பட்டு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு தனியார் பள்ளியில் படிக்கும் சர்வேஸ் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் 351 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். இந்த சிறுவனுக்கு குறைந்த மதிப்பெண் எடுத்ததால் பள்ளியில் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக சிறுவன் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளான்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர் வெளியே சென்ற நிலையில் சர்வேஸ் மற்றும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். அப்போது ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.