தமிழக அரசானது பெண்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி, பெண் தையலர்களிடம் அரசு ஒப்படைத்துள்ளது.

சோதனை அடிப்படையில் 100 பள்ளிகளுக்கான ஆர்டர் முதற்கட்டமாக கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிப்பெற்றால் 37 லட்சம் மாணவர்களுக்கான 2 செட் சீருடைகளை தைத்து கொடுக்கும் பணி ஒப்படைக்கப்படும். பல ஆயிரக்கணக்கான பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு இந்த அருமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.