தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தரமில்லாத உணவுகள் குறித்த செய்திகள்வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஒருவேளை நாம் உணவகத்திற்கு செல்லும் போது, அங்கே தரமில்லாத உணவுகளை கண்டறிந்தால், அது குறித்து புட் சேஃப்டி கனெக்ட் (Food Safety Connect) என்ற செல்போன் ஆப் மூலமாக புகார் அளிக்கலாம்.

இந்த ஆப் மூலமாக அனுப்பப்படும் புகார்கள் அந்தந்த மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நேரடியாக சென்றடையும். பெறப்பட்ட புகார்கள் குறித்து 24 மணி நேரத்தில் அதிகாரிகள் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதி இருப்பதால் உடனடியாக இதற்கு தீர்வும் கிடைக்கும்.