
திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை அனுமதித்தனர். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது 14 வயது சிறுவர்கள் 2 பேர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக வந்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதேபோன்று முகமது தாலித் (55) என்பவரும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது