10, +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றன. இதற்கு காரணமான தலைமை ஆசிரியர்களுக்கு விழா நடத்தப்படும் எனக் கூறியுள்ள கல்வித்துறை, தமிழில் 100/100 எடுத்த 43 மாணவர்களும் கவுரவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.