
ஒடிசாவில் உள்ள சரத்சந்திரபூரியில் ரோகித்தாஸ் சிங் என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் அவரது சகோதரரான லட்சுமிகாந்த் சிங் என்பவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ரோஹித்தாஸ் தனது தாயிடம் சென்றார். அவரிடம் 10 கிலோ அரிசி வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு அவரது தாய் ராய்பரி சிங் கொடுக்க மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த ரோகித்தாஸ் கோடாரியால் தனது தாயை கடுமையாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவர் கோடாரியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து லட்சுமிகாந்த் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.