
மக்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சேமித்து வைத்து எதிர்காலத்தில் பணம் நெருக்கடி இல்லாமல் வாழ நினைக்கிறார்கள். அதற்கு நிறைய திட்டங்கள் இந்தியாவில் உள்ளது. குறிப்பாக தபால் நிலைய திட்டம் மக்களிடையே அதிகமான வரவேற்பு பெற்றுள்ளது. பல்வேறு வங்கிகளும், LIC நிறுவனங்களும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு பல்வேறு சேம்பு திட்டங்கள் அமல் படுத்தியுள்ளன.
எல் ஐ சி மியூச்சுவல் ஃபண்ட் தினசரி 100 ரூபாய் சேமிக்கும் SIP திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. தினமும் SIP வழக்கமான சேமிப்பு மற்றும் முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்க்க உதவுகிறது. இதன் மூலமாக தங்களுடைய பணத்தை சேமித்து முதலீடு செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம். சில்லறை விற்பனை கடை உரிமையாளர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள். தினசரி முதலீடு செய்வதன் மூலமாக ஒழுங்குபடுத்தப்பட்ட சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள விரும்புவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.