தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் என்பது அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்பிறகு வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கீடு செய்யப்படும் நிலையில் அதில் 100 யூனிட் மின்சாரத்திற்கு இலவசம் போக மீதமுள்ள பயன்பாட்டுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரத்தை அரசாங்கம் ரத்து செய்வதாக நேற்று செய்தி ஒன்று வெளியானது.

அதாவது சிலர் மோசடி செய்வதால் அரசாங்கத்துக்கு இழப்பீடு ஏற்படுவதால் 100 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த செய்தியில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பில் 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை ரத்து செய்வதாக வந்த செய்தியில் உண்மையில்லை. மேலும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.