மக்களவை தேர்தலில் எடப்பாடி அணி தோல்வியை சந்தித்தது. ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு அவரும் தோல்வியை தழுவியினார். இதனால் அதிமுகவினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விக்ரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிர் கொண்டு 11-வது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா? இல்லை ஒன்றுபட்ட அதிமுகவாக களம் இறங்கி 2019 ஆம் வருடம் இதே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் நாம் ஈட்டிய வெற்றியை நிலை நாட்ட போகிறோமா என்று இபிஎஸ்க்கு ஓபிஎஸ் அறிக்கை மூலமாக கேள்வி எழுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.