
தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், 7,55,451 மாணவ மாணவிகள் மொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தில் 97.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக திருப்பூர் மாவட்டம் 97.79 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.
இதைத்தொடர்ந்து கோயம்புத்தூர் (97.59%) நான்காம் இடத்திலும், தூத்துக்குடி (97.36%) ஐந்தாம் இடத்திலும், சிவகங்கை (97.26%) ஆறாம் இடத்திலும், கன்னியாகுமரி (97.05%) எட்டாம் இடத்திலும், ஈரோடு (96.98%) ஒன்பதாம் இடத்திலும், நாமக்கல் (96.94%) பத்தாமிடத்திலும் இருக்கிறது. இதைத்தொடர்ந்து அரியலூர் 96.88 சதவீதம், திருநெல்வேலி 96.61%, ராமநாதபுரம் 96.30 சதவீதம், திருச்சி 96.2%, தென்காசி 95.96 சதவீதம், மதுரை 95.84 சதவீதம், தஞ்சாவூர் 95.18 சதவீதம், கரூர் 94.31%, சேலம் 96.22%, சென்னை 94.14 சதவீதம், நீலகிரி 93.85 சதவீதம், திண்டுக்கல் 93.77%, புதுச்சேரி 93.45 சதவீதம், தேனி 93.17%, புதுக்கோட்டை 92.81%, தர்மபுரி 92.72 சதவீதம், செங்கல்பட்டு 92.52%, திருவள்ளுர் 92.47 சதவீதம், கடலூர் 92.4%, திருவாரூர் 91.46 சதவீதம், திருப்பத்தூர் 91.13 சதவீதம், கள்ளக்குறிச்சி 91.6 சதவீதம், காஞ்சிபுரம் 90.82 சதவீதம், நாகப்பட்டினம் 90.68%, விழுப்புரம் 90.66%, மயிலாடுதுறை 90.15 சதவீதம், திருவண்ணாமலை 89.8%, கிருஷ்ணகிரி 89.69%, வேலூர் 89.20%, காரைக்கால் 88.57%, ராணிப்பேட்டை 87.50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.