மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள். இவருக்கு முத்தரசன்(28), அபிமன்யு(23) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் அபிமன்யுவும், முத்தரசனும் ஏழாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இந்த விஷயத்தை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அபிமன்யு மற்றும் முத்தரசன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.