திருப்பதி மாவட்டத்தில் உள்ள அபி கண்ட்ரிகை கிராமத்தில் சுஷாந்த்(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை பக்கத்து வீட்டில் வசிக்கும் 3 1/2 வயது குழந்தையை சாக்லேட் வாங்கி கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். பின்னர் அச்சத்தில் அங்கேயே குழி தோண்டி சிறுமியின் உடலை புதைத்து விட்டு தப்பி சென்றார்.

இதற்கிடையே குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர், ஸ்ரீஷாந்தை பிடித்து தர்ம அடி கொடுத்த போது நடந்த சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுஷாந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.