
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சென்னை தான் தலைமை இடமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் சென்னை மெட்ராஸ் எனும் அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் சென்னையில் வாழ்ந்த அவர்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சென்னையின் அந்த காலப்பகுதியில் வாழ்ந்த மன்னர்கள் குறித்தும் அவர்களுடைய நிலை என்ன குறித்தும் இப்போது பார்க்கலாம். சென்னை ராயப்பேட்டையில் சுமார் 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது.
இதில் அந்த காலம் முதல் மன்னர் வம்சாவளியினர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஆற்காடு நவாப் ஆட்சி செய்தபோது சென்னையில் பல இடங்கள் அவர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அப்போது அவர்கள் சென்னை கடற்கரை அருகில் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் 1268 முதல் 1855 ஆம் ஆண்டு வரையில் காலப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள் .இதனை தொடர்ந்து 1855 ஆம் வருடம் ஆங்கிலேயர்களின் வாரிசு சிறப்பு கொள்கையின் பிரகாரம் ஆற்காடு நவாப் ஆங்கிலேயர் ஆட்சிக்கு சென்றது .
அந்த சமயத்தில் “ஹாதி மஹால்” என்ற சிறிய இடத்தில் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு ஆங்கிலேயருடன் நல்ல உடன்படிக்கை ஏற்பட்டது. அடுத்து ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால் என்ற பெரிய அரண்மனையை ஆற்காடு நவாப்பிற்கு அளித்தனர். அன்று முதல் இன்று வரை நவாப் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்து வருகிறார்கள். தற்போது முகமது அப்துல் அலி நவாப் என்பவர் ஆற்காடு நவாப்பின் மன்னராக இருக்கிறார். இவர்களுடைய ஆரம்ப காலத்தில் வாழ்ந்து வந்த சேப்பாக்கம் அரண்மனை அரசுடமையாக்கப்பட்டு தற்பொழுது அரசின் அலுவலகம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.