கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது நான்கு பலாத்கார வழக்குகள் உள்ளது. இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில், இவர் 15 சிம்கார்டுகளை பயன்படுத்தி தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், பிரஜ்வல் ரேவண்ணா  சுமார் 15 சிம்கார்டு பயன்படுத்தியுள்ளார். வேலை மற்றும் சிபாரிசு கேட்டு வரும் பெண்களை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளார். அதோடு வீடியோ புகைப்படம் எடுத்ததோடு அவற்றை பல எண்களில் இருந்தும் அந்த பெண்களுக்கான அனுப்பி மிரட்டி மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்ததும் தெரியவந்துள்ளது.