
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பேட்மிட்டன் வீராங்கனையை பயிற்சியாளர் 25 முறை பாலியல் பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவைச் சேர்ந்தவர் 26 வயதான சுரேஷ் பாலாஜி. இவர் ஒரு பேட்மிட்டன் பயிற்சியாளர். இவர் ஒரு 16 வயது சிறுமியை 25 முறை பாலியல் பலாத்காரம் செய்ததோடு 8 சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்களையும் வைத்துள்ளார். இவர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவர்களை நிர்வாணமாக போட்டோ எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்ற நிலையில் தவறுதலாக தன் பாட்டியின் செல்போனில் இருந்து ஒரு நிர்வாண போட்டோவை பயிற்சியாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த அந்த சிறுமியின் பாட்டி அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் பாலாஜியை பிடித்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. அவர் 13 முதல் 16 வயதுடைய 8 சிறுமிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வைத்திருந்தார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் புகார் கொடுத்த நிலையில் போலீசார் அவரை கடந்த சனிக்கிழமை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.