இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே ஆன டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்று சாம்பியன் வென்றது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007 ஆம் வருடம் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு உலக கோப்பையை வெல்ல முடியாமல் இந்திய அணி இருந்த நிலையில் 17 வருடத்திற்கு பிறகு இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை நாடே கொண்டாடி வருகிறது.

அதன்படி நள்ளிரவில் தெருக்களை ஆக்கிரமித்த ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். மேலும் மும்பை விமான நிலையத்தில் மேளதாளத்தோடு கொண்டாட்டமும் நடைபெற்றது.