இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இது சில பாதகங்களை ஏற்படுத்தினாலும் சில நேரங்களில் நன்மையும் செய்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது 18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சகோதரன் பால் கோவிந்தை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சகோதரி ராஜ்குமாரி கண்டுபிடித்துள்ளார்.

வேலை தேடி மும்பை சென்ற கோவிந்த் அதன்பிறகு என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் அவர் போட்ட இன்ஸ்டாகிராம் ரீல்சில் அவரது டிரேட் மார்க் உடைந்த பல் தெரிந்துள்ளது. இதன் மூலம் அடையாளம் கண்ட சகோதரி அவரை தொடர்பு கொள்ளவே பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்து உள்ளது.