
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோருக்கு 100 மனநல ஆலோசகர்கள் மனநலன் சார்ந்த அறிவுரைகளை வழங்க இருக்கிறார்கள். இதில் சுழற்சிக்கு 30 ஆலோசர்கள் வீதம் 3 சுழற்ச்சியாக அவர்கள் செயல்படுவார்கள். மேலும் பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஆலோசனை பெற 104 மற்றும் 14416 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.