டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மலேசியாவில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று  சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் சாதனை படைத்த இந்திய அணிக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து  எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, மலேசியாவில் நடைபெற்ற பெண்களுக்கான 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் வாகை சூடியுள்ள நம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். மேலும் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி வாகை சூடி உள்ள நம்முடைய இளம் வீராங்கனை படை இன்னும் பல வெற்றிகளை குவித்திட வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.