
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் புனிதன்(22). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பௌசியா(19) கடந்த 20 நாட்களுக்கு முன்பு பவுசியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
கடந்த சில நாட்களாக மன உளைச்சலையில் இருந்த பவுசியா தனது பெற்றோர் வீட்டில் இருந்தார். நேற்று நீண்ட நேரமாகியும் பவுசியா அரை கதவை திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை தட்டினர்.
ஆனாலும் அவர் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கட்டிலில் பச்சிளம் குழந்தை இறந்து கிடப்பதோடு, பவுசியா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பவுசியாவையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பவுசியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.