தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கான 25 சதவீதம் இட ஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ, ஐ சி எஸ் பள்ளிகளை சேர்க்க முடியாது என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ் பள்ளிகளுக்கு மாநில அரசு கட்டணம் நிர்ணயம் செய்வதில்லை என்பதால் அந்த பள்ளிகளை 25% ஒதுக்கீட்டில் சேர்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வசிக்கும் இடத்திலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.