நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. 25 வயதான இவர் ஒரு வருடத்திற்கு முன்பாக தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு வீட்டில் இருந்தே மேற்படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பிரியதர்ஷினி மன உளைச்சலை இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக இவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று  வீட்டிலிருந்த பிரியதர்ஷினி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.