சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் முதல் சிங்கள் நாளை மாலை 5:00 மணிக்கு வெளியாகும் நிலையில் இன்று புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், அமிதாப்பச்சன் மற்றும் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது “மனசிலாயோ” பாடலின் ப்ரோமோ வீடியோவில் மிகப்பெரிய சிறப்பு ஒன்றினை அனிருத் வைத்துள்ளார்.

அதாவது லெஜன்ட் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலமாக அனிருத் கொண்டு வந்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி மலேசியா வாசுதேவன் இறந்த நிலையில், கிட்டதட்ட 27 வருடங்களுக்குப் பிறகு மலேசியா வாசுதேவன் வேட்டையன் படத்தில் பாடியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவருடைய குரலை ஏஐ மூலமாக அனிருத் கொண்டு வந்துள்ளார். மேலும் மலேசியா வாசுதேவன் குரலில் வேட்டையன் படத்தின் முதல் பாடலை முழுமையாக காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.