
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 சென்ட் நிலத்திற்காக விருதம்பாள் என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான விருதம்பாள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலையை நிகழ்த்திய எல்லப்பன் மற்றும் அவருடைய தரப்பினரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிலத்திற்காக மூதாட்டியை உயிரோடு தீ வைத்து எரித்த சம்பவம் அந்த மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.