தமிழகத்திற்கென தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கை அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகம் செய்த புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆலோசனையை பெற்று அறிக்கை தயாரித்துள்ளது. இன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைத்துள்ளது.