
கடந்த நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். அதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைகின்றது. இந்நிலையில் பதவியேற்பு அமைச்சகத்திற்கானவர்களை தேர்வு செய்யும் வேலைகளில் ட்ரம்ப் ஈடுபட்டு வருகின்றார். ஜனவரியில் பதவியேற்கும் ட்ரம்ப் அடுத்த 4 வருடங்களுக்கு அதாவது 2029 வரை ஆட்சியில் இருப்பார். ஜோ பைடன் ஆட்சி போல் இல்லாமல் ட்ரம்ப் ஆட்சியில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற பயம் இப்போதே பலரை தொற்றிக் கொண்டுள்ளது.
இந்நிலையில் அதில் இருந்து தப்பிக்க பிரபல சொகுசு கப்பல் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதில் அடுத்த 4 வருடங்கள் கடலிலேயே உலகத்தை சுற்றி வரும் பயண திட்டத்தை சொகுசு கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் Villa vie Residences க்ரூஸ் கப்பல் மூலம் 4 ஆண்டுகள் பயணிக்கும் இந்த திட்டத்திற்கு keep forward என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த 4 வருட பேக்கேஜில் டபுள் ரூமில் ஒரு நபருக்கு $159,999 மற்றும் ஒரு நபர் தங்கும் சிங்கிள் அறைக்கு $255,999 கட்டணம் ஆகும். அடுத்த 4 ஆண்டுகளில் 140 நாடுகளில் உள்ள 425 துறைமுகங்களுக்கு சென்று 7 கண்டங்களையும் அவற்றில் உள்ள 13 உலக அதிசயங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தீவுகளையும் சுற்றிவர முடியும் சுமார் 600 பேர் இதில் பயணிக்கலாம். இப்போது கப்பல் ஏறினால் அடுத்த 2029 ஆம் ஆண்டு தான் இவர்கள் மீண்டும் அமெரிக்கா வந்து சேர்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.