
சுமார் 41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக் கோழி கூடு ஒன்றை ஆந்திரப் பிரதேசத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இது உலகிலேயே மிகவும் பழமையான நெருப்புக்கோழி கூடு ஆகும். உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பாக அழிந்து போன பெரிய விலங்கு இனங்களில் இதுவும் ஒன்றாகும்.
முன்பு பழமையான நெருப்புக்கோழி முட்டை ஓடானது இமயமலையின் இந்திய பகுதியிலுள்ள சிவாலிக் மலையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை 20 லட்சம் வருடங்களுக்கு முற்பட்டவையாக கூறப்படுகிறது.