
சென்னையில் உள்ள பெருகாம்பாக்கம் பகுதியில் மானசா என்பவர் வசித்து வருகிறார். இவர் தபால் துறைக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மானசாவுக்கு தபால் துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது மானசா பதிவு தபால் ஒன்றை அனுப்பிய போது ரூ.29.50-க்கு பில் வந்துள்ளது. ஆனால் ஊழியர்கள் 30 ரூபாய் வசூல் செய்துள்ளனர். இதனால் மீது உள்ள 50 காசு, அவர் திருப்பி கேட்ட நிலையில் தபால் துறை ஊழியர்கள் அந்த காசினை கொடுக்கவில்லை. இதன் காரணமாக அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் மென்பொருள் கோளாறு காரணமாக அதிக கட்டணம் வசூல் செய்ததை சம்பந்தப்பட்ட தபால் நிறுவனம் ஒப்புக்கொண்டது. மேலும் இதன் காரணமாக மானசாவுக்கு ரூ.15,000 வரையில் இழப்பீடு வழங்குமாறு கோர்ட் தபால் துறைக்கு உத்தரவு போட்டது. மேலும் 50 காசுகளை திருப்பிக் கொடுக்காததால் 15 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.