நடப்பு அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை அனைத்து பயனாளிகளுக்கும் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வரவு வைக்கப்படும் தேதியான 15 அன்று வங்கி விடுமுறை என்பதால் ஒருநாள் முன்னதாகவே 14ம் தேதி தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இம்மாதம் கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 1,06,48,406 பேருக்கு 1000 இம்மாதம் வழங்கப்பட்டதாகவும், வங்கிக் கணக்கு இல்லாத 87,785 பயனாளிகளுக்கு மணியார்டர் மூலமாக உரிமைத் தொகை அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.