இந்திய அணி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ள நிலையில் அதை நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று போட்டி முடிவடைந்த பிறகு ஹர்திக் பாண்டியா பேட்டி அளித்தார். அவர் பேசியதாவது, இந்த வெற்றி மிகவும் உணவுப்பூர்வமாக இருக்கிறது. இதற்காக நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். இருப்பினும் சில நேரங்களில் அது வேலை செய்யாது.

ஆனால் தற்போது மொத்த தேசமும் விரும்பியதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம். கடந்த 6 மாதங்களாக எனக்கு மிகவும் மோசமாக சென்றது. அந்த சமயத்தில் நான் அமைதியாக கடந்து சென்றேன். இருப்பினும் கடினமாக உழைத்தால் என்னால் ஜொலிக்க முடியும் என்பது தெரியும். இதுபோன்ற தருணங்கள் தான் என்னை மிகவும் ஸ்பெஷல் ஆக்குகிறது. மேலும் ராகுல் டிராவிட்டுக்கு என்னுடைய நன்றிகள். அவர் ஒரு அற்புதமான மனிதர். அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் நல்ல நண்பர்கள். மேலும் அனைத்து துணை பயிற்சிகளுக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறினார்.