
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பாக புதிய திட்டங்களும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பேரவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்.
அதன்படி ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். அதனைப் போலவே உ உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்கள் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 20,000 ரூபாயிலிருந்து 30000 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.