சிவகங்கை மாவட்டம் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(61). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு சேகர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் சேகருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.